என்.எல்.சி விரிவாக்கப் பணிகளை கண்டித்து அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

விவசாய நிலங்களை அழித்து என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணிகளை தொடர்ந்து செய்து வருவதை கண்டித்து, சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே, ஒரு வாரத்தை கடந்து என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியில், பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணி எட்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. சரியான இழப்பீட்டுக்கான கோரிக்கை, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக விவசாயிகள், கிராம மக்கள் போராடி வருகின்றனர். இருப்பினும் எந்தவிதமான உத்தரவாதமும், நம்பிக்கை தரும்படியான செயல்பாடுகளும் இல்லாததால், அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். நிலத்தை கையகப்படுத்துவதில் இவ்வளவு ஆர்வம் காட்டும் என்.எல்.சி நிர்வாகம், இழப்பீடு, வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்?, என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version