சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து, 27 ஆயிரத்து 328-க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் 848 ரூபாய் அதிகரித்து, தங்கத்தின் விலை சென்னையில் 27 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 44 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ பார்வெள்ளி 44 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version