வாழ்த்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பொதுச்செயலாளர் நன்றி தெரிவிப்பு..!

Madurai: Former Chief Minister AIADMK's Interim General Secretary Edappadi Palaniswami being greeted by supporters after the Supreme Court's decision allowing him to continue as the Interim General Secretary, in Madurai, Thursday, Feb. 23, 2023. (PTI Photo) (PTI02_23_2023_000066B)

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.  பாமக நிறுவனர் இராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே வாசன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர்,  ஜான் பாண்டியன், பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி, இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், கொங்குநாடு மக்கள் கட்சி பொருளாளர் ஈஸ்வரன், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூத், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் தலைவர் தேவநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள். இவர்கள் அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன்னுடைய நன்றியினை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version