கவுதம் கம்பீரை காணவில்லை எனத் பொதுமக்கள் சுவரொட்டி

டெல்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரைக் காணவில்லை எனப் பொதுமக்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 3 லட்சத்து 91ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். டெல்லியில் வரலாறு காணாத வகையில் புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மக்களெல்லாம் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறலில் துன்புற்று வரும் நிலையில், கவுதம் கம்பீர் இந்திய வங்கதேச அணிகள் விளையாடிய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராகப் பங்கேற்றார். இதனால் சினமடைந்த தொகுதி மக்கள் கவுதம் கம்பீரைக் காணவில்லை எனக் கூறி அவரது படம் பொறித்த சுவரொட்டியைப் பல்வேறு இடங்களிலும் ஒட்டியுள்ளனர்.

Exit mobile version