News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

காந்தியடிகள் ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு

Web Team by Web Team
September 22, 2021
in Top10, TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
காந்தியடிகள் ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு
Share on FacebookShare on Twitter

காந்தியடிகள் அரையாடை தரித்த அடையாள நிகழ்வின் நூற்றாண்டைப் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது மதுரை மாநகரம். அதன் வரலாற்றைப் பேசுகிறது இந்த செய்தித் தொகுப்பு…

மதுரை மேலமாசி வீதியில் உள்ள 251-ம் எண் வீடு, வரலாற்றில் இடம்பெறும் என்று அதுவரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். மதுரைக்கு கதர் பரப்புரைக்காக வந்த காந்தியடிகள் கூட, அதை நினைத்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.

வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக வெகுண்டு எழுந்தபோது அந்நிய துணிகளை புறக்கணித்து, கதர் ஆடைகளின் அவசியத்தை மக்களிடையே நாட்ட, காந்தியடிகள் நாடு முழுவதும் பயணப்பட்டார். அப்படித்தான் 1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி மதுரைக்கு வந்தார் காந்தியடிகள்.

மக்களின் உற்சாக வரவேற்புடன் நுழைந்த காந்தியடிகள், மேலமாசி வீதியில் உள்ள 251-வது வீட்டில்தான் தங்கினார். அங்குதான் அவரது அடையாள அரையாடைக்கான அஸ்திவார வித்து விழுந்தது எனலாம். தனது நெடிய பயணத்தில், இந்திய மக்களின் ஏழ்மையைத் தரிசித்த காந்தியடிகள், தமது கதர் இயக்கத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்க நினைத்தார். தமது உதவியாளரை அழைத்து அவர் அணிந்திருந்த கதர் ஆடையைப் பாதியாக கிழித்தார். அடுத்த நாள், செப்டம்பர் 22, 1921-ம் ஆண்டு தாம் உரையாற்ற வேண்டிய திடலுக்கு அரையாடையை அணிந்துகொண்டு எளிய மனிதராக நடந்தார்.

அந்த நிகழ்வின்பின், தமது வாழ்நாள் முழுவதையும் எளிமையின் அடையாளமாக தாம் பூண்ட அரையாடைக் கோலத்திலேயே கழித்தார். லண்டன் சொசைட்டி கூட்டத்துக்கும் சமரசமின்றி அரையாடையுடனேயே சென்று உரையாற்றினார். வின்ஸ்டன் சர்ச்சிலால் அரையாடை பக்கிரி என்று கேலியும் செய்யப்பட்டார். ஆனால், அந்திக்காலம் வரை துறக்காத அடையாளமாக இருந்த காந்தியடிகளின் அரையாடை அணிந்த நிகழ்வுக்கு, செப்டம்பர் 22 2021 ஆன இன்று நூற்றாண்டு நிறைவு.

மதுரையின் மையப்பகுதியில் மகாத்மா காந்தியின் நினைவுகளைச் சுமந்தபடி, காந்தி நினைவகமாகத் திகழும் மேலமாசிவீதி வீட்டை, தமிழ்நாடு காதி மற்றும் கிராம கைத்தொழில் துறை, கடந்த 1954-ஆம் ஆண்டே விலை கொடுத்து வாங்கி, பராமரித்து வருகிறது. ஆடையைத் துறந்து எறிய, மனிதராய் மக்கள் மனதுக்குள் வித்தாக ஊன்றிய மகாத்மா காந்தியோடு, மாமதுரையும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் சேரனுடன் செய்தியாளர் நவநீதகிருஷ்ணன்.

 

Tags: Gandhimaduraimemorialnewsj
Previous Post

அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை…! தடுக்க சென்னை போலீஸ் புதிய ஏற்பாடு…!

Next Post

"ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனீக்கள் போல் செயல்பட வேண்டும்"

Related Posts

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரைலர் தான்..திமுகவின் பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் பயப்படாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுச்சியுரை!
அரசியல்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரைலர் தான்..திமுகவின் பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் பயப்படாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுச்சியுரை!

March 13, 2023
எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

March 13, 2023
தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினம் இன்று..பாடிய படி யாத்திரை செய்த தொண்டர்கள்..என்ன பாடலாக இருக்கும்?
இந்தியா

தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினம் இன்று..பாடிய படி யாத்திரை செய்த தொண்டர்கள்..என்ன பாடலாக இருக்கும்?

March 12, 2023
மதுரை மீனாட்சி அம்மனைக் காண்பதற்கு மதுரை வந்தார் குடியரசுத் தலைவர்!
இந்தியா

மதுரை மீனாட்சி அம்மனைக் காண்பதற்கு மதுரை வந்தார் குடியரசுத் தலைவர்!

February 18, 2023
திருமங்கலம் – மதுரை இடையிலான புதிய இரட்டை ரயில் !
தமிழ்நாடு

திருமங்கலம் – மதுரை இடையிலான புதிய இரட்டை ரயில் !

February 14, 2023
பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
Next Post
"ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனீக்கள் போல் செயல்பட வேண்டும்"

"ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனீக்கள் போல் செயல்பட வேண்டும்"

Discussion about this post

அண்மை செய்திகள்

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version