முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் பொதுச்செயலாளர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது!

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவ்ர்களுக்கு 69-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட கழகம் சார்பில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான தங்கமணி தலைமையில், முன்னாள் அமைச்சரும், மாநில மகளிர் அணி இணை செயலாளருமான சரோஜா, பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, உள்பட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் மூர்த்தி, மற்றும் கழக அமைப்பு செயலாளரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ. அரி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version