News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

வனப்பகுதிகுள் சின்னத்தம்பியை விரட்ட வனத்துறை முயற்சி

Web Team by Web Team
February 3, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வனப்பகுதிகுள் சின்னத்தம்பியை விரட்ட வனத்துறை முயற்சி
Share on FacebookShare on Twitter

காட்டின் சுதந்திரமான வாழ்க்கைக்கே வனவிலங்குகள் அதிகமாக பிரியப்படும் என்ற கோட்பாட்டை பொய்யாக்கியுள்ளது சின்னத்தம்பி யானை. வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விட்டாலும், எத்தனை கிலோ மீட்டர் தொலைவானாலும் கடந்து மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கே ஓடிவந்து விடுகிறது சின்னத்தம்பி…

சுவைக்கு மனிதர்கள் அடிமையாவது இயல்பு. இதுவே ஒரு யானைக்கு நடந்தால், அதுதான் காட்டுயானை சின்னத்தம்பி விஷயத்திலும் நடந்துள்ளது.அடிக்கடி வனப்பகுதியிலிருந்து குடியிருப்புப்பகுதிகளுக்கு வரும் சின்னத்தம்பி யானை அங்கு, விளைநிலங்களில் இருக்கும், கரும்பு, வாழைப்பயிர்களில் தனக்கு தேவையான அளவிற்கு சாப்பிட்டு விட்டு செல்லுமாம். ஆனால் தன்னை வம்பிழுக்காத மனிதர்களுக்கு அது எந்த தீங்கையும் செய்யாது என்கின்றனர் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள்.

ஜனவரி 25ம் தேதி கோவை தடாகம் பகுதியில் உள்ள சோமையனூர் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்திய சின்னத்தம்பிக்கு மயக்கஊசி போட்டு, கும்கி யானை கலீம் உதவியுடன் ஜேசிபி வாகனம் மூலம் ஏற்றி 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாப்ஸ்லிப்பின் வரகளியாறு வனப்பகுதியில் விட்டு வந்தனர் வனத்துறையினர்.

சின்னத்தம்பிக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அதன் அசைவுகள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் சில தினங்கள் கழித்து மீண்டும் டாப்ஸ்லிப்பிலிருந்து 40 கிலோ மீட்டர் பயணம் செய்து, புளியம்கண்டி வழியாக கோட்டூர் குடியிருப்புப்பகுதிக்கு வந்தது சின்னத்தம்பி. அங்கிருந்து அங்கலகுறிச்சி, ஜேஜே.நகர் வழியாக கோபால்சாமி கரடில் முகாமிட்டது.

அன்றிரவு விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழை மரங்களை சேதப்படுத்தி, அங்கிருந்த தீவனத்தையும் ருசி பார்த்தது.இதையடுத்து கோவையின் அரசூர், தேவனூர்புதூர், தீபாளப்பட்டியில் சுற்றித்திரிந்தது. யானையை திருமூர்த்திமலைக்கு விரட்ட வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மருள்பட்டிக்கு வந்த சின்னத்தம்பி, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணம் செய்து அடர்ந்த முள்காடு உள்ள மைவாடிக்கு சென்றது. வரும்வழியில் வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை சுவைத்த யானை, அங்கிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரையும் குடித்துள்ளது. தற்பொழுது மைவாடியிலேயே முகாமிட்டுள்ளது சின்னத்தம்பி.

கும்கி யானை கலீம் உதவியுடன் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்த போதும், கலீமை தனது நண்பராக மாற்றிக் கொண்ட சின்னத்தம்பி, அதனுடன் சேர்ந்து உணவுகளை சுவைத்த பின்னர், மீண்டும் மைவாடி அடர்ந்த வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது. அதை அதன் போக்கிலேயே வனப்பகுதிக்குள் விரட்ட, 80க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் காத்துள்ளனர். இந்நிலையில் சின்னத்தம்பியை விரட்ட மாரியப்பன் என்ற மற்றுமொரு கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

Tags: chinnathambiforest department
Previous Post

காலத்தை கடந்து வாழும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள்

Next Post

முருகன் கோயில் மயில்வாகன சிலையை உடைத்த இளைஞர்

Related Posts

18வது நாளாக தொடரும் ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி
TopNews

18வது நாளாக தொடரும் ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி

October 12, 2021
சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையுடன் புகைப்படம் எடுக்க கூடாது -வனத்துறை
TopNews

சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையுடன் புகைப்படம் எடுக்க கூடாது -வனத்துறை

January 13, 2020
தமிழகத்தின் வனத்துறை இளநிலை உதவியாளராக பதவியேற்ற திருநங்கை
TopNews

தமிழகத்தின் வனத்துறை இளநிலை உதவியாளராக பதவியேற்ற திருநங்கை

December 7, 2019
சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யகூடாது: வனத்துறை எச்சரிக்கை
TopNews

சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யகூடாது: வனத்துறை எச்சரிக்கை

August 6, 2019
ஒசூர்  பொது மக்களுக்கு  வனத்துறையினர் எச்சரிக்கை
TopNews

ஒசூர் பொது மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

August 2, 2019
தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை தாக்கல்
TopNews

தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை தாக்கல்

July 1, 2019
Next Post
முருகன் கோயில் மயில்வாகன சிலையை உடைத்த இளைஞர்

முருகன் கோயில் மயில்வாகன சிலையை உடைத்த இளைஞர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version