அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா உறவினர் பாஸ்கரன் நேரில் ஆஜர்

அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் நேரில் ஆஜரானார்.

ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு தொடர்பாக, பெங்களூரு சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலா விளக்கமளிக்கவுள்ளார். இந்நிலையில், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

Exit mobile version