வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக பூத்துக்குலுங்கும் பூவரசம்பூ

கொடைக்கானலில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக பூவரசம் பூ பூத்து குலுங்குவது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் பனி காலம் முடிவடைந்து தற்போது வசந்த காலம் துவங்கியுள்ளது. இதையொட்டி,கொடைக்கானலைச் சுற்றியுள்ள பேத்துபாறை, குறிஞ்சி நகர், பிரையண்ட் பூங்கா மற்றும் மலைப்பகுதிகளில் சிவப்பு நிறத்தில் பூவரசம் பூ பூத்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய இந்த பூவரசம் பூ, தற்போது பூக்கத் துவங்கியிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் அதனை ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். 

Exit mobile version