பொன்னமராவதியில் கொட்டி தீர்த்த கன கனமழையால் சாலையில் வெள்ளப்பெருக்கு

பொன்னமராவதி பகுதியில் கொட்டி திர்த்த கன கனமழை காரணமாக சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மூன்று தினங்களாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது. அப்பகுதியில் காய்கறி மற்றும் வேர்கடலை போன்ற பயிர்களுக்கு தற்பொழுது பெய்த தொடர் மழையால் போதிய தண்ணீர் கிடைத்துள்ளதாக சிறு குறு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாலையில் நீர் வழிந்தோடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Exit mobile version