நீலகிரியில் நள்ளிரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு பெய்த கன மழையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரி ஏற்பட்டது. இதனால் குன்னூர், கிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. குன்னூரில் நேற்று இரவு மட்டும் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆற்று நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்புச்சுவர் எழுப்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version