வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகளை விட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

முழுக் கொள்ளளவை எட்டியுள்ள வீராணம் ஏரியில் மீன்குஞ்சுகளை விடுமாறு தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் வீராணம் ஏரியில் மீன்பிடிதொழில் செய்து 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏரியில் தண்ணீர் நிரம்பியவுடன் பல லட்சம் மீன்குஞ்சுகளை விட்டு மீனவர்களின் வருமானத்திற்கு வழிவகை செய்யும். இந்நிலையில் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள வீராணம் ஏரியிலிருந்து சம்பா நெல் நடவிற்குத் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்த நேரத்தில் ஏரியில் மீன்குஞ்சுகளை விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version