பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் தீ விபத்து

மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முதல் தளத்தில் அதிகாலையில், ஏற்பட்ட தீ மளமளவென பரவி கட்டடத்தின் 5 தளங்களுக்கும் பரவியது. இதன் காரணமாக அலுவலகத்திலிருந்து கரும்புகை வெளியே வந்ததை கவனித்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், அதி நவீன உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமடைந்தன.

Exit mobile version