சென்னை மயிலாப்பூரில் தனியார் விடுதியில் தீடீரென தீ விபத்து

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.

சென்னை சிஜடி காலனியில் உள்ள தனியார் உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் விடுதி முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சென்ற தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version