சென்னை அருகே தனியார் குடோனில் தீ விபத்து

சென்னை அருகே தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி மதிப்பிலான பிளாஸ்டிக் பொம்மைகள் எரிந்து நாசமானது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அருணாசலம். மாதவரத்தில் இவருக்கு சொந்தமாக உள்ள குடோனில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டுப் பொம்மைகள், வைக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து ஆன்லைன் மூலம் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் குடோனில் தீடிரென தீப்பிடித்தது. செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மாதவரம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்

Exit mobile version