தனியார் மஞ்சள் பொடி எசன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து

தென்காசி அருகேயுள்ள மஞ்சள் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள வல்லம் இலஞ்சி சாலையில் தனியார் மஞ்சள் பொடி எசன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. சிவகண் பட்டேல் என்பவருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அங்கிருந்த பொருட்கள் பற்றி எரியத் துவங்கின. பணியில் ஈடுபட்டு இருந்த கண்ணன், மணிகண்டன், செண்பகம் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version