கல்லணையில் தண்ணீர் திறப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

கல்லணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்டா மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்து வைத்தார். இந்நிலையில், மேட்டூரிலிருந்து, கல்லணைக்கு வந்த நீர், டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக, முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த நீர் விளை நிலங்களுக்கு தடையின்றி செல்ல, தமிழக அரசு, ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை தூர் வாரி வருகிறது. இதற்காக, திருவாரூர், நன்னிலம் பகுதியில் தாளடி மற்றும் சம்பா சாகுபடி செய்யவிருக்கும் விவசாயிகள், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version