கருகும் 300 ஏக்கர் நிலக்கடலை பயிர்:நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நரிக்குடி அருகே வீரசோழன், இருஞ்சிறை, குருவியேந்தல், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 300 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நிலக் கடலை பயிரிட்டுள்ளனர். ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்தும் மழை பெய்யாததால் கடலைப் பயிர்கள் முழுவதும் கருகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version