மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்வதை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்!

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளில் திறம்பட செயல்பட்டதுடன், முக்கிய நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆட்சியர் ஆகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் பயன்பெற முடியாமல் தவித்த அரசியல் கட்சியினர் ஆட்சியர் ஆகாஷ் குறித்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து அவரை தொழில் திறனாய்வு பிரிவு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து தென்காசியின் புதிய ஆட்சியராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகாஷின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சில நல்ல அதிகாரிகளை விடியா திமுக அரசியல் கட்சியினர் பணி செய்யவிடாமல் தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

Exit mobile version