செடி ஒன்றுக்கு 4 கிலோ வரை வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்துவரும் விவசாயி

பழனியை அடுத்துள்ள டி.கே.என்.புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் குளிர்பிரதேசத்தில் மட்டுமே விளையும் வாட்டர் ஆப்பிள் பழங்களை தனது நிலத்தில் பயிரிட்டு வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகிறார். இதுபற்றி தெரிவித்த அவர், கடந்த ஆண்டு வேளாண்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் படி மண்பரிசோதனை செய்து இயற்கை முறையில் வாட்டர் ஆப்பிள் பழ செடிகளை பயிரிட்டதாகவும், தற்போது அவை நன்றாக வளர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார். செடி ஒன்றில் 4 கிலோ வரை விளைச்சல் கிடைப்பதாகவும், வாட்டர் ஆப்பிள் பழத்திற்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version