மானாவாரி நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்த விவசாயி

மானாவாரி நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ள அந்தியூரை சேர்ந்த விவசாயி, நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வழக்கமாக கிணற்றுப் பாசனத்தின் வாயிலாக சூரியகாந்தி சாகுபடி செய்துவருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மானாவாரி பூமியில் வெள்ளி திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமசாமி சூரியகாந்தி பூ சாகுபடி செய்துள்ளார். அவரின் நம்பிக்கைப்படி கொட்டித்தீர்த்த பருவமழையால் சூரியகாந்தி அமோக விளைச்சல் பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

Exit mobile version