நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருக்கும் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி உள்பட 11 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. இதனையடுத்து அவர்களை மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு சிபிசிஜடி காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரையும் விசாரணை செய்த நீதிபதி, இவர்களின் நீதிமன்ற காவலை வரும் ஜீலை 18-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 11 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
Discussion about this post