டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 31 வரை அவகாசம் அளித்து அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை எம்.பி.ஏ படிப்பிற்கு 16 ஆயிரத்து 427 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 4 ஆயிரத்து 672 பேரும், எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பிற்கு 10 ஆயிரத்து 288 பேரும் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இன்றுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், வரும் 31-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version