சூரப்பா விவகாரம்: 15 நாட்களுக்குக்ள் இறுதி அறிக்கை

 

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் இன்று செய்தியஆளர்களைச் சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது, 

“அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா ஓய்வு பெற்றாலும் விசாரணைக்காக அழைத்தால் கட்டாயம் நேரில் வந்து ஆஜராக வேண்டும். தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இன்னுன் 15 நாட்களுக்குள் அனைவரையும் விசாரித்து இறுதி அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வேன்.தவறு செய்தவர்கள் எங்கு சென்றாலும் தப்பிக்க முடியாது” என கூறியுள்ளார்.

துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது எனவும் கலையரசன் தகவல்.

Exit mobile version