மாணவ மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகள் பாராட்டைப் பெற்றது!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாலாட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 42வது நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பேரிடர் காலங்களில் உயர்ந்த இடத்தில் சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக ,மாணவிகள் உயர்த்த கோபுரத்திலிருந்து தத்ரூபமாக செய்து காட்டியது காண்போரை வியக்க வைத்தது.

மேலும் குதிரைகள் சாகசங்கள் உட்பட Gymnastics நிகழ்ச்சிகள் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி, மாணவ மாணவிகளின் வீணை இசை நிகழ்ச்சியும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

Exit mobile version