விபரீத செயலில் ஈடுபட்ட மாணவர்கள்!

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான மேம்பால ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் கற்கள் இருந்தது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. தண்டவாளத்தில் கற்கள் வைத்த மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஐடிஐ மாணவர்கள் 3 பேர் தண்டவாளத்தில் கற்களை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரும்பு கம்பிகளை திருடும் நோக்கில் கற்களை வைத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version