மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தேர்வு

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப்படிப்பு வரை படிப்பதற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு மாணவர்கள், தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதற்காக முதற்கட்டமாக மாநில அளவில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 514 மையங்களில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 851 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.காலை 9 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.30 மணி வரை சிந்தனைத்திறன், எழுத்தறிவு ஆகிய இரண்டு பிரிவாக நடைபெறுகிறது. மாநில அளவில் நடைபெறும் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு மே மாதம் தேசிய அளவில் தேர்வு நடத்தப்படும்.

Exit mobile version