தலைநகரத்தை கொலைநகரமாக மாற்றி இருக்கிறது திமுக – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் தமிழகமே ஒரு அமளி பூங்காவாக திகழ்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே விடியா ஆட்சியில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் சென்னை மாநகரம் கொலை மாநகரமாக மாறி உள்ளதுடன், தமிழகமே அமளி பூங்காவாக திகழ்கிறது என குற்றம் சாட்டினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் விருகை ரவி, வேளச்சேரி அசோக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பேசிய அவர், தொடர்ந்து ஊழல் செய்வது, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது, ஊடகங்களை பழிவாங்குவது என சமூக விரோத செயல்களை மட்டும் தான் திமுகவினர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், 2 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராக மட்டுமே இருந்து வருகிறார் எனவும், ஆசியாவில் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக உருவாக வேண்டும் என்பதற்காகவே கோடி கோடியாய் கொள்ளை அடித்து, ஏழை எளிய மக்களை பரிதவிக்க விட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

Exit mobile version