வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு: தொழில் முனைவோர் மகிழ்ச்சி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தொழில் முனைவோர் கருத்து தெரிவித்தனர்.

சிறு விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்ற அறிவிப்புக்கும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மீனவர்கள், அறிவிப்பு ஏட்டளவில் இல்லாமல் செயல் வடிவில் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.

அதேவேளையில், இடைக்கால பட்ஜெட்டில் தங்களுக்கான அறிவிப்பு இடம் பெறவில்லை என திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version