தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்யவில்லை – சத்யபிரதா சாஹு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் அரசுக்கு எதிராக செயல்பட்டதால், சபாநாயகர் தனபால் அவர்களை தகுதிநீக்கம் செய்தார். இதனை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டது.

இதனிடையே, 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதா? என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பதில் அனுப்பி உள்ளார்.

Exit mobile version