தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தையும் தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூ செய்து வருகிறார். தற்போது வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாட்டு பணிகளில் மும்முரமாக இருக்கும் அவருக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தலைமை செயலகத்திலிருக்கும் சத்யபிரதா சாஹூவின் அலுவலகத்திற்கு வந்திருக்கும் கடிதம் ஒன்றில், வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், மர்ம கடிதத்தை அனுப்பிய நபரை தேடி வருகின்றனர்.

Exit mobile version