வெடிகுண்டு மிரட்டல் – ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரை இறக்கம்

அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டனில் தரை இறக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணம் நெவார்க் நகருக்கு ஏர் இந்தியா 191 விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும் போது வந்த வெடிகுண்டு மிரட்டலால், அந்த விமானம் உடனடியாக லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Exit mobile version