மதுரையில் தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது

மக்களை தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் சம்பந்தமான அனைத்து புகைப்படங்களும் அகற்றப்பட்டன.

மக்களவை தேர்தல் 7 கட்டங்காளாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக, மாவட்ட ஆட்சியர் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் பிரிவுகள், கட்டுப்பாட்டு அறைகள் என அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசியல் சம்பந்தமான அனைத்து புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

இதேபோல், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version