ராமநாதபுரத்தில் தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது: வீரராகவ ராவ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி ராமநாதபுரத்தில் தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன. இதை மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சக்கர நாற்காலிகளை இயக்குவதற்கு தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version