சென்னை ரிப்பன் மாளிகையில், தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

சென்னை ரிப்பன் மாளிகையில், தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில், வடசென்னை, தென், மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில், தேர்தலை நடத்தக் கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது.

சென்னை மாநகர மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், இணை ஆணையர் லலிதா, துணை ஆணையர்கள் கோவிந்தராவ், மதுசுதன் ரெட்டி, குமரவேல் பாண்டியன், வடசென்னை, மத்திய, தென் சென்னை தேர்தல் அதிகாரிகள் திவ்யதர்ஷினி, ஸ்ரீதர், ஆல்பி ஜான், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அதிகாரியும் மாவட்ட வருவாய் அதிகாரியுமான கருணாகரன் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version