அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் கல்வி சீர்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட பொருட்களை கல்வி சீராக வழங்கினர்.

நத்தம் அருகே முழையூர் கிராமத்தில் ராவுத்தன்பட்டி அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. பீரோ, டேபிள், சேர் மற்றும் பள்ளி குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் கல்வி சீர் வரிசையாக வழங்கப்பட்டன. சீர் வரிசைப் பொருட்களை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்.

Exit mobile version