திண்டுக்கல்லில், புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் இன்று அடிக்கல்

திண்டுக்கல்லில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

திண்டுக்கல்லில் 325 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இன்று காலை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அடிக்கல் நாட்டு விழாவில், முடிவடைந்த திட்டப் பணிகளை மக்களுக்கு அர்பணித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

அடிக்கல் நாட்டு விழாவையொட்டி திண்டுக்கல் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Exit mobile version