சுதந்திரப் போராட்டவீரர் தீரன் சின்னமலைக்கு பொதுச்செயலாளர் மரியாதை..!

சென்னை கிண்டியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கும், அவரது திருவுருவ படத்திற்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினர்.சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை திருஉருவ படத்திற்கு அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து தீரன் சின்னமலையின் திருஉருவ சிலைக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கழக தலைமை நிலைய செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் தீரன் சின்னமலையின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கழக துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன்,செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி,ஜெயக்குமார், செல்லூர் ராஜு, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாசி ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version