மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இதுவே இறுதி நாளாகும். எனவே இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காத பொதுமக்கள் விரைந்து சென்று பதிந்துகொள்ளவும். மேலும் இந்த ஆதார் இணைப்பிற்கான கால அவகாசம் இனிமேல் நீட்டிக்கப்படாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழத்தைப் பொறுத்தவரை 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 இலட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 இலட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. ஆதார் இணைப்பு பணியானது கடந்த நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கியது. இன்று 15.02.2023 உடன் முடிவடைய உள்ளது, பொதுமக்கள் விரைந்து செயல் புரிக!

Exit mobile version