மஹா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் திட்டாணிக் கருப்பர் கோயில் மஹா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டியில் 13 ஜோடியும் சிறிய மாட்டு வண்டியில் 22 ஜோடிகள் என பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்க பணம், பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version