கோவை பீளமேடு அருகே உள்ள கொடீசியா சாலையில், அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதி, அவர் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில், ஜென்னி கிளப் பகுதியை நோக்கி, இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகத்தில் தாறுமாறாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தூக்கிவீசப்பட்ட இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பீளமேடு போக்குவரத்து காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து, கல்லூரி மாணவி தட்சிணா ரூத் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post