சிக்கராயபுரம் கல்குவாரி நீரை சென்னை மாநகருக்கு பயன்படுத்த அதிகாரிகள் திட்டம்

சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளை இணைத்து, சென்னை மாநகருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகருக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில், மாற்று நீராதாரமாக சிக்கராயபுரம், கல்குவாரியில் உள்ள நீரை சுத்திகரித்து, குடிநீராக விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 10 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணியை, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அனைத்து குவாரிகளிலும், தேவையான அளவு நீரை வெளியேற்றி, துளையிட்டு, ஒவ்வொரு குவாரிக்கும் இணைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு இணைப்புகளை ஏற்படுத்திய பின்னர், ஒரே இடத்தில் இருந்து மட்டும் நீரை எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version