திமுக பிரமுகர் வீடு, அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில் கைதான திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன் குமாரின் வீடு, அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையை சேர்ந்த ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் தயாரித்த பாஸ்போர்ட் கொண்டு கனடாவுக்கு செல்ல உள்ளதாக க்யூ பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலி ஆவணங்களை தாயாரித்து கொடுத்த திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் க்யூ பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கிடைத்துள்ளது.

Exit mobile version