மூதாட்டியை தாக்கி நிலத்தை எழுதி வாங்கிய திமுக பிரமுகர்

சேலம் மாவட்டம் உத்தம சோழபுரத்தில் மூதாட்டியை தாக்கி விட்டு, ஒரு ஏக்கர் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிய திமுக பிரமுகர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ரத்தினத்திற்கு, சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் கணக்கிச்சிப்பாளையத்தில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூதாட்டி ரத்தினம் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி ரத்தினத்தின் அண்ணன் மகனும், திமுக பிரமுகருமான விஸ்வநாதன் என்பவர், மூதாட்டியை தாக்கி, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டி ரத்தினம், திமுக பிரமுகர் விஸ்வநாதன் மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

Exit mobile version