உடனே கருவளையம் மறைய வேண்டுமா? இத மட்டும் தவறாமல் பண்ணுங்க

 

இன்றைய சூழ்நிலையில் அனைவரும் செல்போன், கணினி அதிகம் பயன்படுத்துவதால் கண்கள் மிகவும் சோர்வடைந்து கண்ணுக்கு கீழே கருவளையம் ஏற்படுகிறது.எனவெ இயற்கை முறையில் கருவளையத்தை போக்க சில டிப்ஸ்கள் இதோ..

1.தேங்காய் எண்ணெய்யை தினமும் இரவு தூங்குவதற்கு முன் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு உறங்கினால் கரு வளையம் குறையும்.தொடர்ந்து இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

2.பாதாம் எண்ணெயுடன் சிறிது தேன் கலந்து தூங்குவதற்கு முன் கண்களை சுற்றி மசாஜ் செய்யுங்கள்.இது கருவளையத்தை குறைக்க உதவும்.

3.சிறிதளவு ரோஸ் வாட்டரை, காட்டனில் நனைத்து கண்களை சுற்றி 15 நிமிடம் வைத்தால் கண்சோர்வை குறைக்க உதவும்.

4.பாலுடன் சமையல் சோடாவை கலந்து சிறிது நேரம் fridge-ல் வைக்கவேண்டும்.பின்பு அந்த பேஸ்ட்டை கண்களை சுற்றி apply செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் கண்களுக்கு நல்ல புத்துணர்வு அளிக்கும்.

5.வெள்ளிரிக்காய் சாற்றை சிறிது நேரம் fridge-ல் வைத்து ,பின்பு கண்களை சுற்றி மசாஜ் செய்து 30 நிடங்கள் கழித்து கழுவினால் கண்களுக்கு உடனடி பொலிவினை தரும்.

 

Exit mobile version