நிலத்தை அளக்க சென்றவர் மீது திமுக பிரமுகர்கள் கல்வீச்சு

ஒப்பந்த காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவின்பேரில் நிலத்தை அளக்க வந்தவர்கள் மீது திமுகவைச் சேர்ந்தவர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் திமுக வார்டு செயலாளர் சிவகுமார் என்பவர், 2013-ம் ஆண்டு தனக்கு சொந்தமான எட்டரை ஏக்கர் நிலத்தை கரூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் கடனுக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து கிரையம் செய்தார்.

ஆனால், ஒப்பந்த காலத்தற்குள் சிவகுமார் கடனை திருப்பி செலுத்தாததால், நீதிமன்றத்தை நாடிய சுப்ரமணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலத்தை அளப்பதற்கும், அதனை சமன் செய்யவும், சுப்பிரமணி சென்றுள்ளார். ஆனால், அவர்களை பணி செய்ய விடாமல், திமுகவைச் சேர்ந்த சிலர் கற்களைக் கொண்டு தாக்கினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version