உள்கட்சி மோதல் ரவுடியிசத்தை கையாளும் தி.மு.க

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்…

திமுகவுக்கும் அடிதடிக்கும் எப்போதும் ஏகப்பொருத்தம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ரவுடிசத்தை தவறாமல் பின்பற்றும் கட்சி திமுக என்பது பொதுவான கருத்து. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்தாண்டு முழுவதும் பல்வேறு அடிதடிகளில் இறங்கி பெருமை தேடிக்கொண்டனர் திமுகவினர். ஓசி பிரியாணி கேட்டு கடைக்காரரின் மூக்கில் குத்திய வீரனும் திமுக காரர்தான். பியூட்டி பார்லருக்குள் புகுந்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு பெண்ணை சரமாரியாக எட்டிஉதைத்த பலசாலியும் திமுக காரர்தான். பேன்ஸிஸ் ஸ்டோரில் புகுந்து கட்டாய வசூலில் ஈடுபட்டு கடைக்காரரை செருப்பால் அடித்த வசூல் நாயகனும் திமுக காரர்தான். ஓசி டீ கேட்டு கடைக்காரரை மிரட்டிய காட்சியை படம்பிடித்த பத்திரிகையாளரை தாக்கிய பண்பாளரும் திமுக காரர்தான்.

வழக்கமாக பொது இடங்களில் அல்லது பொதுமக்களை தாக்கும் திமுகவினர் தங்களது உட்கட்சி கூட்டங்களிலேயே கைவரிசையை காட்டுவதும் வாடிக்கை, அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கமுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அடுத்தவர் வளர்வதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாத நல்ல உள்ளம் கொண்ட திமுகவினர் சிலர், தங்கள் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக தாக்க தொடங்கினர். கைகளால் தாக்கிக்கொண்டது போதாதென்று இருக்கைகளை தூக்கி வீசியும், நாற்காலிகளை நாளாபுறமும் சிதறடித்தும் தங்களது வீரத்தை பறைசாற்றினர்.

பொதுவெளியாக இருந்தாலும், கட்சிக்கூட்டமாக இருந்தாலும் கைகலப்பில் ஈடுபடுவது எங்கள் கொள்கைகளில் ஒன்று என சொல்லாமல் சொல்கிறது திமுகவினரின் சண்டைக்காட்சி……

Exit mobile version