ஏலேய் பிரியாணி ரெடி ஆய்ருச்சுலே! அமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்து பறந்தோடிய உடன்பிறப்புகள்!

மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அமைச்சர் மூர்த்தி, பேசிக் கொண்டிருக்கும்போது, தொண்டர்கள் பிரியாணி சாப்பிட ஓடிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுக பூத் ஏஜெண்ட் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விடியா திமுக அரசின் அமைச்சர் மூர்த்தி பேசிக் கொண்டிருக்கும்போது, பிரியாணி ரெடியானது என தெரிந்தவுடன், அமைச்சரின் பேச்சை புறந்தள்ளிய உடன்பிறப்புகள், பிரியாணியை ஒரு கைப்பிடிக்க அடித்து, பிடித்துக் கொண்டு ஓடி இடம் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
YouTube video player

Exit mobile version