வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக மேடையில் பேசிய திமுக நிர்வாகி

கடந்த சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தததாக, கோபி தொகுதியில் நின்று தோல்வியடைந்த திமுக வேட்பாளர் மணிமாறன் பேசிய வீடியோ வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற மணிமாறன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மணிமாறன், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தததாக தெரிவித்தார். திமுக தலைமை கொடுத்த பணத்தை யார் யார் என்ன செய்தார்கள் என்பது தமக்குத் தெரியும் என்றும், உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் மணிமாறன் பேசினார்.

திமுக நிர்வாகியின் இந்த பேச்சு மூலம், திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அப்பட்டமாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

 

Exit mobile version