ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: திமுக பிரமுகர் கைது

ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்துகொண்ட புகாரில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன், இவர் திமுகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். மேலும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 10 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்த சந்திரன், சக பெண் பயணியிடம் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சேலம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சந்திரனை ரயில்வே போலீசார் கைது செய்தனர். திமுக நிர்வாகி பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version